ஊறுகாய் இந்த வார்த்தைய கேட்டவுடனே நம்மை கேக்காமலே நாக்குல தானா எச்சில் ஊறுது.இப்ப நாம கொஞ்சம் வித்யாசமா பூண்டு ஊறுகாய் பண்ணி பாக்கலாமா..
தேவையானது:
பூண்டு 1 கப்
நல்லெண்ணெய் 50 மில்லி
எலுமிச்சை சாறு 1/2 கப்
வெந்தயம் 1ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மல்லி 2 ஸ்பூன்
வத்தல் 12
உப்பு தேவைக்கு
காயப்பொடி 1/2 ஸ்பூன்
செய்முறை:
பூண்டை 2,ரெண்டா நறுக்கிக்கனும்.எலுமிச்சை சாறோட கொஞ்சம் கல் உப்பு சேர்த்து வடி கட்டிக்கனும்.வெந்தயம்,சீரகம்,மல்லி,வத்தல் எல்லாம் சேர்த்து வெறும் வாணலியில வறுத்து பொடியாக்கனும். இப்ப வாணலியில 50 நல்லெண்ணெய ஊற்றி அதுல கடுகு,காயப்பொடி செர்த்துட்டு அத்தோட நறுக்கின பூண்டை சேர்த்து நல்லா வதக்கனும்.இப்ப வறுத்து பொடியாக்கின மசாலா பொடிய சேர்த்து நல்லா குறைஞ்ச தீயில கிளறி விடனும்.கடைசியா கொஞ்சமா வெல்லம் சேர்த்து இறக்கிட வேண்டியது தான்.இப்ப பூண்டு ஊறுகாய் ரெடி..
வெள்ளி, 22 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக