வெள்ளி, 2 ஏப்ரல், 2010

அரிசி வ‌ட‌க‌ம்



ந‌ம்ம‌ வீட்டுல‌ வ‌ழ‌க்க‌மா அம்மா,ஆச்சி எல்லாரும் வ‌ழ‌க்க‌மா செய்ய‌ற‌ அரிசி வ‌ட‌க‌ம் தான் இப்ப‌ நாம‌ செய்ய‌ போகுற‌து..ஆனா எண்ண‌ ம‌ண‌ம் தெரியுமா..

தேவையான‌ பொருட்க‌ள்:

ப‌ச்ச‌ரிசி -1 கிலோ
ப‌ச்ச‌ மிள‌காய் அல்ல‌து காய்ந்த‌ மிள‌காய் வ‌த்த‌ல்- 20
உப்பு -தேவையான‌ அள‌வு
சீர‌க‌ம் -4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு கிலோ ப‌ச்ச‌ரிசியை ஒரு ம‌ணி நெர‌ம் ஊற‌ வெச்சு க‌ழுவி அதோட‌ மிள‌காய் அல்ல‌து காய்ந்த‌ மிள‌காய் வ‌த்த‌ல் சேர்த்து ந‌ல்லா அரைக்க‌னும்,அப்புற‌மா சீர‌க‌ம்,உப்பு,ஒரு மூனு லிட்ட‌ர் த‌ண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு ப‌த‌த்துக்கு க‌ரைச்சு முறுக்கு அச்சில‌ போட்டு மொட்டை மாடியில‌ காய‌ வெச்சுட‌ வேண்டிய‌து தான்,,மூனு நாளுல‌ காய்ஞ்சிடும்.முக்கிய‌மா இதை லேசான‌ தியில‌ தான் பொரிக்க‌னும்,க‌வ‌ன‌ம்.

வேப்ப‌ம்பூ வ‌ட‌க‌ம்

ஊருல‌ இருக்க‌ற‌ வேப்ப‌ ம‌ர‌மெல்லாம் இலை உதிர்த்து துளிர் விட‌ ஆர‌ம்பிச்சாச்சு..இல்னி சித்திரை பிற‌க்க‌க் கூடிய‌ ச‌ம‌ய‌த்துல‌ பூக்க‌வும் ஆர‌ம்பிச்சிடுச்சி இந்த‌ நேர‌த்துல‌ வேப்ப‌ம்பூ ர‌ச‌ம் தான், கொஞ்ச‌ம் வித்யாச‌மா வேப்ப‌ம்பூ வ‌ட‌க‌ம் உங்க‌ளுக்காக‌,



தேவையான‌ பொருட்க‌ள்:

புதுசா பூத்த‌ வேப்ப‌ம்பூ- 1 கிலோ
உளுத்த‌ம் ப‌ருப்பு -1 கிலோ
காய்ந்த‌ மிள‌காய் -25
பெருஞ்சீர‌க‌ம் -3 ஸ்பூன்
சின்ன‌ வெங்காய‌ம் -1/4 கிலோ
உப்பு -தேவையான‌ அளவு
க‌ருவேப்பிலை -1 கைப்பிடி
இஞ்சி -கொஞ்ச‌ம் பெரிய‌ துண்டு

செய்முறை:

உளுந்தை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌ வெச்சு அதோட‌ வ‌த்த‌ல்,பெருஞ்சீர‌க‌ம்,உப்பு,இஞ்சி எல்லாம் சேர்த்து க‌ர‌ க‌ர‌ப்பா அரைக்க‌னும்,சின்ன‌ வெங்காய‌த்தை பொடியா நறுக்கி அர‌ச்ச‌ மாவோட‌ க‌ல‌க்க‌னும்,மாவு வ‌டை மாவு ப‌த‌த்துல‌ தான் இருக்க‌னும், த‌ண்ணி அதிக‌மா இருக்க‌க் கூடாது, அதோட‌ வேப்ப‌ம்பூவையும், க‌ருவேப்பிலையையும் சேர்த்து பிசைஞ்சு பெரிய‌ நெல்லிக்காய் அள‌வு மாவு எடுத்து,பாலித்தீன் பேப்ப‌ருல‌ வ‌டையா த‌ட்டி ந‌ல்லா காய‌ வைக்க‌னும்,ந‌ல்லா 4 நாளைக்கு காய‌ வைக்க‌னும்,க‌ச‌ப்பு அவ்வ‌ள‌வா இருக்காது , டேஸ்ட் ந‌ல்ல‌ வித்யாச‌மா இருக்கும்,சாம்பார்,ர‌ச‌ சாதத்துக்கு தொட்டுக்க‌ ந‌ல்லா இருக்கும் இந்த‌ வேப்ப‌ம் பூ வ‌ட‌க‌ம்.

ர‌வா வ‌ட‌க‌ம்


வெயில் கால‌ம் ஆர‌ம்பிச்சாச்சு.ப‌ரிட்சை ஆர‌ம்பிச்சாச்சு,,,அப்டினா எல்ல‌ரோட‌ பார்வையும்
மொட்டை மாடியில‌ தான் இருக்கும்,ஏன்னா வ‌ட‌க‌ம் செஞ்சு காய‌ப்போட‌னும் இல்லியா..

தேவையான‌வை:

ர‌வை -1 கிலோ
ப‌ச்ச‌ மிள‌காய் -20
சீர‌க‌ம் -3 ஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு

செய்முறை:

ஒரு ப‌ங்கு ர‌வைக்கு எட்டு ப‌ங்கு த‌ண்ணீர் சேர்க்க‌னும்,அதோட‌ விழுதா அரைச்ச‌ மிள‌காய்,சீர‌க‌ம்,தேவையான‌ அளாவு உப்பும் சேர்த்து கூழா அடுப்பில் வெச்சு காய்ச்ச‌னும்,
அடுபிலிருந்து கூழை இற‌க்கி லேசா சூடு ஆற‌ ஆர‌ம்பிச்ச‌தும் ஒரு ஸ்பூனால‌ எடுத்து குட்டி குட்டி வில்லைக‌ளா ஊற்றி காய‌ வைக்க‌னும்,மூனு நாளுல‌ காய்ஞ்சிடும்,ந‌ல்லா காய்ஞ்சிடுச்சினா ரெண்டு வ‌ருச‌ம் வ‌ரைக்கும் கெடாம‌ல் இருக்கும்,லேசான‌ தீயில‌ எண்னெய் விட்டு பொரிச்சி சாப்பிடா த‌னி டேஸ்ட் போங்க‌.

ப‌னீர் புலாவ்

ப‌னீர் ம‌சாலா சாப்பிட்டிருப்பீங்க‌..ஆனா அந்த‌ ப‌னீருலேயே புலாவ் ப‌ண்ணினா எப்ப‌டி இருக்கும்,,எச்சில் ஊறுதா,,வாங்க‌ வாங்க‌,நான் ச‌மைச்சித் தாறேன்,



தேவையான‌ பொருட்க‌ள்

பாசும‌தி அரிசி - 2 க‌ப்
ப‌னீர் -200 கிராம்
பெரிய‌ வெங்காய‌ம் -2
த‌க்க‌ளி -2
ப‌ச்ச‌ மிள‌காய் -4
ப‌ட்டை,கிராம்பு,ஏல‌க்காய் த‌லா- 2
எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம்- 1+1/2 ப‌ழ‌ம்
இஞ்சி+பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
நெய் -4 டீஸ்பூன்
எண்ணெய் -5 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
ப‌ச்சை ப‌ட்டாணி -1/4 க‌ப்
புதினா -ஒரு கைப்பிடி

செய்முறை:

ப‌னீரை ச‌துர‌ ச‌துர‌மா ந‌றுக்கிக்க‌னும்,த‌க்காளி,ப‌ல்ல‌ரியை பொடிசா ந‌றுக்கிக்க‌னும்,ப‌ச்ச‌ மிள‌காயை ரெண்டா ந‌றுக்க‌னும்.அரிசியை க‌ழுவி ப‌த்து நிமிஷ‌ம் ஊற‌ வைக்க‌னும்,எண்ணெய் விட்டு ப‌னீரை பொரிச்செடுத்துக்க‌னும்,ஆனா ஒண்ணு மொறு,மொறு'னு பொரிக்க‌க் கூடாது.

அடுப்பை சிம்'மில‌ வெச்சு ஒரு பாத்திர‌த்துல‌ எண்ணெய்,நெய் விட்டு ப‌ட்டை, கிராம்பு, ஏல‌க்காயை போட்டு தாளிக்க‌னும், இப்ப‌ ப‌ச்சை மிள‌காய்,புதினா,ந‌றுக்கின‌,வெங்காய‌ம்,த‌க்காளி போட்டு வ‌த‌க்கி,ப‌ச்ச‌ ப‌ட்டாணியையும் சேர்த்து ந‌ல்லா கிள‌றி விட‌னும்,ந‌ல்லா வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ப‌ச்ச‌ வாச‌னை போகுற‌ வ‌ரைக்கும் கிண்டி விட‌னும்,
ந‌ல்லா எல்லாம் வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்சதும் மூனு க‌ப் வெந்நீர் ஊற்றி கொதிக்கும்போது உப்பு போட்டு அரிசியை சேர்த்து மூடி வைக்க‌னும்,.

ந‌ல்லா வேக‌ ஆர‌ம்பிச்ச‌தும் அரிசி மேல‌ த‌ண்ணீர் நிற்காம‌ல் சேர்ந்தாபோல‌ வ‌ரும்போது பொரிச்ச‌ ப‌னீர் சேர்த்து எலுமிச்சைசாறையும் ஊற்றி கிள‌றி மூடி வெச்சா ப‌னீர் புலாவ் ரெடி..