செவ்வாய், 23 மார்ச், 2010

த‌க்காளி வெங்காய‌ம் ஊறுகாய்




பொண்ணு பார்த்துட்டு வ‌ர்ற‌வுக‌,அல்ல‌து க‌ல்யாண‌ த‌ர‌க‌ர் கிட்ட‌ பொண்ணு எப்ப‌டி இருக்குனு கேட்டா போதும் ,,,உட‌னே பொண்ணு த‌க்காளி மாதிரி த‌ள‌ த‌ள‌னு இருக்குறானு சொல்லுவாங்க‌..இப்ப‌டி ப‌ட்ட‌ த‌க்காளிய‌ ஆர‌ம்ப‌த்துல‌ வேண்டாத‌ பொருளா,விஷ‌ ப‌ழ‌மா தான் பார்த்தாங்க‌ளாம்..அதுக்க‌ப்ப்ற‌மா ப‌ஞ்ச‌ம் வ‌ந்த‌ ச‌ம‌ய‌த்துல‌தான் வேற‌ வ‌ழி இல்லாம‌ த‌க்காளிப்ப‌ழ‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌ளாம் ந‌ம்ம‌ ம‌க்க‌ள்... இப்டி எல்லாம் நிறைய‌ க‌தைக‌ள் த‌க்காளிக்கு உண்டு,,இப்ப‌டி ப‌ட்ட‌ தக்காளியோட‌ வெங்காய‌ம் சேர்த்து என்ன‌ ச‌மைய‌ல் செஞ்சாலும் சூப்ப‌ர் தான்,,ஏன்னா இவ‌ங்க‌ ரெண்டு பேரும் சேர்ந்தா தான் நிறைய‌ கிரேவி கிடைக்கும்..இப்ப‌டியான‌ த‌க்காளி,வெங்காய‌ம் சேர்த்த நான் உங்க‌ எல்லாருக்கும் ஒரு ஊருக்காய் செஞ்சி த‌ர‌லாமுனு நினைக்கிறேன்..


தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் ‍ 2
பூண்டு 10 ப‌ல்
ந‌ல்லெண்ணைய் ‍ 1/4 லிட்ட‌ர்
வ‌த்த‌ல் தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காய பொடி ‍1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை லேசா‌ எண்ணெய் விட்டு வ‌த‌க்கி மிக்ஸியில‌ ந‌ல்லா அரைச்சி வ‌டிக‌ட்டிக்க‌னும்,ஏன்னா ச‌க்கை இருந்தா ந‌ல்லா இருக்காதுல்ல‌.வெங்காயத்தையும்,பூண்டையும் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வ‌த‌க்கி அதையும் அரைச்சிக்க‌னும்.அடுப்பில‌ ந‌ல்லெண்ணெய‌ ஊற்றி க‌டுகு,வெந்த‌ய‌ம் தாளிச்சி அதோட‌ த‌க்காளி+வெங்காய‌ம் பூண்டு விழுது சேர்த்து ப‌ச்சை வாச‌னை போக‌ வ‌த‌க்க‌னும்,இப்ப‌ அதோட‌ சிவ‌ந்த‌ நிற‌ வ‌த்த‌ல் தூள்,ம‌ஞ்ச‌ள் தூள்,பெருங்காய‌ப்பொடியை ஒண்ணு பின்னால‌ ஒண்ணா சேர்த்து தேவையான‌ அளவு உப்பு சேர்த்து லேசா வ‌த‌க்கி 10 நிமிஷ‌ம் அடுப்பை "சிம்"மில‌ வெக்க‌னும்.மீத‌ம் இருக்க‌ற‌ எண்ணெயை ஊற்றி லேசா சுருள‌ வேக‌வெச்சி 10 நிமிஷ‌ம் ஆற‌ வெச்சா த‌க்காளி வெங்காய‌ம் ஊறுகாய் ரெடி..

ஆந்திரா த‌க்காளி கார‌ ச‌ட்னி


ந‌க‌மும்,ச‌தையும் மாதிரி,பூவும் நாரும் மாதிரி,க‌ண‌வ‌னும் ம‌னைவி மாதிரி தான் இட்லியும் ச‌ட்னியும்,ச‌ரியான‌ பொருத்தம்.என்ன‌தான் தேங்காய் ச‌ட்னி,தேங்காய் பொட்டுக்க‌ட‌லை ச‌ட்னி,த‌க்காளி ச‌ட்னி,புதினா ச‌ட்னி,கொத்தம‌ல்லி ச‌ட்னி சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்ச‌ம் நாக்குக்கு ருசியான‌ கார‌சார‌மான‌ ச‌ட்னியை செஞ்சா யாராவ‌து வேணாம்னு சொல்லுவாங்க‌ளா ம்ஹூம்..
இப்ப‌ நான் உங்க‌ எல்லாருக்கும் ஆந்திரா த‌க்காளி ச‌ட்னி செஞ்சி த‌ர‌ட்டுமா..இதை க‌த்துக்கொடுத்த‌து என் சின்ன‌ வ‌ய‌சு பெரிய‌ வ‌ய‌சு தோழி சுபாக்கா..இப்ப‌ அவ‌ங்க‌ சென்னையில‌...




தேவையான‌ பொருட்க‌ள்:


த‌க்காளி - 1/2 கிலோ
புளி - எலுமிச்சை அள‌வு
பூண்டு - 2 ப‌ல்
காய்ந்த‌ மிள‌காய் (வ‌த்த‌ல்) - 7 (கார‌ம் வேணும்னா இன்னும் சேர்த்துக்க‌லாம்)
உப்பு தேவையான‌ அள‌வு


தாளிக்க‌:

ரீஃபைண்ட் ஆயில் - 2ஸ்பூன்
க‌டுகு - 1டீஸ்பூன்
க‌ருவேப்பிலை - சிறிது


செய்முறை:

முத‌ல்ல‌ த‌க்காளி+புளி ரெண்டையும் கொஞ்ச‌மா த‌ண்ணீர் சேர்த்து ந‌ல்லா அவிச்சி எடுத்து ஆற‌ வெச்சுக்க‌னும்,இப்ப‌ வ‌ர‌ மிள‌காய்,பூண்டு,ரெண்டையும் லேசான‌ எண்ணெய் விட்டு வ‌றுத்து எடுத்துக்க‌னும்,இப்ப‌ மிக்ஸியில‌ அவிச்சி எடுத்த த‌க்காளி,புளி,வ‌றுத்தெடுத்த‌ வ‌த்த‌ல்,பூண்டு,கொஞ்ச‌ம் உப்பு சேர்த்து ந‌ல்லா அரைச்சுக்க‌னும்,,

இப்ப‌ வாணாலியில‌ எண்ணெய் விட்டு க‌டுகு,க‌ருவேப்பிலை தாளிச்சி அதுல‌ அரைச்ச‌ விழுது சேர்த்து லேசா த‌ள‌ த‌ள‌ வ‌ந்த‌தும் சூடா எடுத்தா ஆந்திரா த‌க்காளி கார‌ ச‌ட்னி ரெடி...