வியாழன், 18 பிப்ரவரி, 2010

மிள‌கு ர‌ச‌ம்


சில‌ பேருக்கு ந‌ல்லா "சுள்ளு"னு ர‌ச‌ம் சாப்பிட‌ பிடிக்கும்,,நானும் அப்ப‌டித்தான்..ஏன்னா ர‌ச‌ம் சாப்பிட்டா ந‌ல்லா ஜீர‌ணமாகும்னு எங்க‌ ஆச்சி சொல்லுவாங்க‌..இப்ப‌ நாம‌ மிள‌கு ர‌ச‌ம் செய்ய‌ப்போறோம்..


அரைக்க‌

வ‌த்த‌ல் 3
ம‌ல்லி 1 ஸ்பூன்
சீர‌க‌ம் சிறிது
மிள‌கு 10
பூண்டு சிறிய‌து 1
காய‌ப்பொடி 1 சிட்டிகை
புளி எலுமிச்சை அள‌வு
ம‌ஞ்ச‌ள் தூள் 1 சிட்டிகை

தாளிக்க‌

எண்ணெய் 2 ஸ்பூன்
க‌டுகு 1 சிட்டிகை
வ‌த்த‌ல் 2
ம‌ல்லித்த‌ழை ஒரு கைப்பிடி

செய்முறை

வ‌த்த‌ல்,சீர‌க‌ம்,வ‌த்த‌ல்,பூண்டு,மிள‌கு,காய‌ப்பொடி,எல்லாம் சேர்த்து அர‌ச்சிக்க‌னும்,புளியை ஊற‌ வெச்சிக்க‌னும்,இப்ப‌ அடுப்பில் வாணலிய‌ வெச்சு ச‌மைய‌ல் எண்ணெய் ஊற்றி காய்ந்த‌தும் அதுல‌ க‌டுகு,வ‌த்த‌ல் சேர்த்து தாளிச்ச‌தும் அதுல‌ அரைத்த‌ ம‌சாலா சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ ரெண்டா ந‌றுக்கின‌ த‌க்காளி சேர்த்து லேசா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்த‌தும் ப‌ச்ச வாச‌னை போன‌தும் புளித்த‌ண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழை சேர்த்து இற‌க்கினா அட‌டா என்ன‌ ம‌ண‌ம் ..

ஆலு ம‌சாலா





உருளைக்கிழ‌ங்கு தான் "ஆலு".ஏற்க‌ன‌வே உருளைக்கிழ‌ங்கு தொக்கு ப‌ண்ணிருக்குறோமே அப்டினா இது என்ன‌ன்னு கேக்க‌றீங்க‌ளா...இதுக்கும் அதுக்கும் சின்ன‌ வித்யாச‌ம் தான்..அது டேஸ்ட். ச‌மைக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா..

தேவையான‌வை

உருளைக்கிழ‌ங்கு -3
த‌க்காளி -2
ப‌ல்லாரி -1
ப‌ச்ச‌ மிள‌காய்- 3
வ‌த்த‌ல் தூள் -1/2 ஸ்பூன்
ம‌ல்லித்தூள் -1 ஸ்பூன்
உப்பு - தேவையான‌ அள‌வு
எண்ணெய் - பொரிக்க‌
க‌டுகு,உளுத்த‌ம்ப‌ருப்பு த‌லா- 1/4 ஸ்பூன்
க‌ருவேப்பிலை- கொஞ்ச‌ம்

செய்முறை

உருளைக்கிழ‌ங்கை ச‌துர‌மா ந‌றுக்கி கொஞ்ச‌ம் உப்பு, ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து வேக‌ வெக்க‌னும்,இப்ப‌ வாண‌லியில‌ எண்ணெய் காய‌ வெச்சு க‌டுகு,உளுத்த‌ம்ப‌ருப்பு,க‌ருவேப்பிலை தாளிச்சு அதோட‌ ரெண்டா ந‌றுக்கின‌ மிள‌காய்,ந‌றுக்கின‌ ப‌ல்லாரி,த‌க்காளி சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்.அதோட‌ வ‌த்த‌ல் தூள்,த‌னியாத்தூள்,உப்பு சேர்த்து ந‌ல்லா கிண்டி விட‌னும்,,கிரேவிக்காக‌ த‌ண்ணீர் சேர்த்துக்க‌லாம்,,இன்னொரு க‌டாய‌ காய‌ வெச்சு அதுல‌ அவித்த‌ உருளைக்கிழ‌ங்கை பொரிச்சி எடுத்துக்க‌னும்,,பொரித்த உருளைக்கிழ‌ங்கை அடுப்பில் வெந்துட்டிருக்க‌ற‌ கிரேவியோட‌ சேர்த்து கிள‌ரிக்க‌னும்,,ப‌ச்சை வாச‌னை போன‌தும் ம‌ல்லித் த‌ழையை ந‌றுக்கி லேசா தூவி விட்டு எடுத்தா ஆலு ம‌சாலா ரெடி.

தேங்காய்பால் முறுக்கு


சின்ன‌வ‌ங்க‌ள்ள‌ இருந்து பெரிய‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் முருக்குன்னா ரொம்ப‌வே பிடிக்கும்,அதுவும் தேங்காய் பால் முருக்குன்னா எப்ப‌டி இருக்கும்,அட‌டா,,என்னோட‌ மாமியார் தேங்காய் பால் முருக்கு ந‌ல்லாவே செய்வாங்க‌..அவ‌ங்க‌கிட்ட‌ இருந்து க‌த்துக்கிட்டு இப்ப‌ உங்க‌ எல்லாருக்கும் முருக்கு எப்படி செய்ய‌லாம்னு சொல்றேன்,,


தேவையான‌வை

ப‌ச்ச‌ரிசி 1/2 கிலோ
தேங்காய்பால் தேவையான‌ அள‌வு
சீர‌க‌ம் 1/2 ஸ்பூன்
ச‌மைய‌ல் எண்ணெய் தேவைக்கு
நெய்,வ‌றுத்த‌ரைத்த உளுந்த‌மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையான‌ அள‌வு


செய்முறை

ஊற‌ வெச்ச‌ ப‌ச்ச‌ரிசிய‌ மாவாக்கி வ‌றுத்தெடுக்க‌னும்,அத்தோட‌ உப்பு,சீர‌க‌ம்,நெய் சேர்த்து கொதிக்குற‌‌ தேங்காய்பால் சேர்த்து ந‌ல்லா பிச‌ஞ்சி வெச்சுக்க‌னும்,முருக்கு பிழிய‌ற‌ அச்சுல‌ கொஞ்ச‌மா மாவெடுத்து அதை முருக்கா பிழிஞ்சுக்க‌னும்‌,

இப்ப‌ க‌டாயில‌ எண்ணெய் காய‌ வெச்சு அதுல‌ முருக்கை போட்டு எடுத்தா சூப்ப‌ரான‌ தேங்காய் பால் முருக்கு ரெடி..‌

துள‌சி ப‌க்கோடா..


அட‌ இதென்ன துள‌சி ப‌க்கோடா புதுசா இருக்கேன்னு பாக்க‌றீங்க‌ளா..சின்ன‌ வ‌ய‌சுல‌ எங்க‌ம்மா எங்க‌ளுக்கெல்லாம் ச‌ளி பிடிச்சிட‌க்கூடாதுனு தூதுவ‌ளை இலையில‌ ர‌ச‌ம் ப‌ண்ணி கொடுப்பாக‌..ஆனா நாங்க‌ அத‌ சாப்பிட்டா தானே..ம்ஹூம்..அதுக்கு என்ன‌ ப‌ண்ணுவாங்க‌ன்னா தூதுவ‌ளை இலைவெச்சு ப‌ஜ்ஜி செஞ்சி கொடுப்பாங்கா..ம்ம்ம்..ந‌ல்லா இருக்கும்,அப்ப‌டித்தான் இந்த‌ துள‌சி ப‌க்கோடாவும்..இந்த‌ ப‌னிக்கால‌த்துக்கு ஏற்ற‌து,

தேவையான‌வை

க‌ட‌லை மாவு 1 க‌ப்
இஞ்சி‍ பூண்டு விழுது 1 ஸ்பூன்
வ‌த்த‌ல் தூள் 1 ஸ்பூன்
மிள‌காய் 2
கொத்த‌ம‌ல்லி த‌ழை,க‌ருவேப்பிலை 1 கைப்பிடி
பொடியா ந‌றுக்கின‌ வெங்காய‌ம் 1/4 க‌ப்
துள‌சி 1/4 க‌ப்
ச‌மைய‌ல் சோடா 1/2 ஸ்பூன்
உப்பு,ச‌மைய‌ல் என்ணெய் தேவையான‌ அள‌வு

செய்முறை

க‌ட‌லை மாவோட‌ இஞ்சி பூண்டு விழுது,வ‌த்த‌ல் தூள்,உப்பு,ச‌மைய‌ல் சோடா எல்லாம்சேர்த்து ந‌ல்லா க‌ல‌ந்துக்க‌னும்,அதுல‌ ந‌றுக்கின‌ மிள‌காய்,வெங்காய‌ம்,ம‌ல்லித்த‌ழை,க‌ருவேப்பிலை துள‌சி சேர்த்து தேவையான் த‌ண்ணீர் சேர்த்து கெட்டியா பிச‌ஞ்சிக்க‌னும்,க‌டாயில‌ என்ணெய் காய‌ வெச்சு பிச‌ரி வெச்சிருக்க‌ற‌ மாவை உதிர்த்த‌ மாதிரி போட்டு வெந்த‌தும் எடுத்து வெச்சா அட‌டா...