வியாழன், 21 ஜனவரி, 2010

ஆட்டுக்கால் பாயா








தேவையான‌வை:

ஆட்டுக்கால்- 2


 கேர‌ட் -1

பீன்ஸ் -4

கோஸ் இலை- 1கைப்பிடி

த‌க்காளி- 2

இஞ்சி+பூண்டு விழுது- 1 ஸ்பூன்

ப‌ல்லாரி -1

க‌ருவேப்பிலை-‍ ‍கொஞ்ச‌ம்

மிள‌குத்தூள் -11/2 ஸ்பூன்

சீர‌க‌த்தூள் -1 ஸ்பூன்

ம‌ஞ்ச‌ள் தூள்- 1/2 ஸ்பூன்

ப‌ட்டை -2

கிராம்பு -2

ஏல‌க்காய்- 2

முந்திரி,பாதாம்- 10

தேங்காய் துறுவ‌ல்- 1/2 க‌ப்

செய்முறை :

      கேர‌ட்,பீன்ஸ்,கோஸ் இலையை ந‌றுக்கிக்க‌னும்.ஆட்டுக்காலை நால்ல‌ சுத்த‌ம் செஞ்சி வெட்டி எடுத்து குக்க‌ர்ல‌ 3 விசில் வெச்சு வேக‌ வைக்க‌னும்.அப்புற‌மா ந‌றுக்கின‌ காய்க‌ளோட‌, ப‌ல்லாரி,த‌க்காளி கொஞ்ச‌ம் உப்பு சேர்த்து 1 விசில் வெச்சு ந‌ல்லா வேக‌ வைக்க‌னும்.. ‌பாதாம் ,முந்திரி ,மிள‌குத்தூள் ,ம‌ஞ்ச‌ள் தூள் ,சீர‌க‌த்தூள் ,உப்பு ,தேங்காய் சேர்த்து ந‌ல்லா அரைச்சு வெச்சுக்க‌னும்.


       இப்ப‌ லேசான‌ தீயில‌ குக்க‌ர‌ வெச்சு அதுல‌ எண்ணெய் விட்டு காய்ஞ்ச‌தும் க‌ருவேப்பிலை இஞ்சி+பூண்டு விழுது சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ அத்தோட‌ ப‌ட்டை,கிராம்பு,ஏல‌க்காய் சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌னும்.ப‌ச்சை வாச‌ம் போன‌தும் அரைச்சு வெச்சிருக்க‌ர‌ க‌ல‌வைய(பாதாம்,முந்திரி,மிள‌குத்தூள்,ம‌ஞ்ச‌ள் தூள்,சீர‌க‌த்தூள்,உப்பு,தேங்காய்)எல்லாம் சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌னும்,இப்ப‌ வேக‌ வெச்சு எடுத்த‌ ஆட்டுக்கால்,காய் க‌ல‌வைய‌ சேர்த்துக்க‌னும்,வேணும்னா கொஞ்ச‌ம் த‌ன்ணி க‌ல‌ந்துக்க‌லாம்,த‌ள‌ த‌ள‌ன்னு கொதிச்சி வ‌ர்ர‌ நேர‌த்துல‌ இற‌க்கி வெச்சுக்க‌னும்,இது தான் ஆட்டுக்கால் பாயா.க‌டைசியா ந‌றுக்கின‌ ம‌ல்லித்தழை சேர்த்து இற‌க்கி சுட‌ சுட‌ இடியாப்ப‌த்துல‌ ஊத்தி மூக்கு முட்ட‌ சாப்பிட‌லாம்..



புதினா ப‌ரோட்டா


எப்ப‌வுமே புதினா உட‌ம்புக்கு ந‌ல்ல‌துனு சொல்லுவாங்க‌,அத‌னால‌ தான் புதினா துவைய‌ல் அர‌ச்சி நாம‌ சாப்பிடுவொம்.ஆனா சில‌ பேருக்கு,குழ‌ந்தைக‌ளுக்கு பிடிக்காது.அதுக்காக‌த்தான் ந‌ம்ம‌ புதினா ப‌ரோட்டா,,செஞ்சி பாத்துடுவோமா,வாங்க‌.
தேவையான‌வை:
கோதுமை மாவு -100 கிராம்
மைதா மாவு -100 கிராம்
க‌ட‌லை மாவு -100 கிராம்
பொடித்த‌ ர‌வை -50 கிராம்
ந‌றுக்கின‌ புதினா- ஒரு கைப்பிடி
வேக‌ வெச்ச‌ சேப்ப‌ங்கிழ‌ங்கு (தேவைப்ப‌ட்டால்)- 1 க‌ப்
ஓம‌ப்பொடி -1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வ‌த்த‌ல் தூள்- 1ஸ்பூன்
எண்ணெய் -50 மில்லி
ரீஃபைன்ட் ஆயில்,த‌யிர் மாவு பிசைய‌ -1ஸ்பூன்
செய்முறை :
மைதா,கோதுமை மாவு,ர‌வை க‌ட‌லை மாவு எல்லாத்தையும் உப்பு,வ‌த்த‌ல் பொடி சேர்த்து ச‌லிச்சி வெச்சிக்க‌னும்,இந்த‌ மாவு க‌ல‌வையோட‌ கொஞ்ச‌ம் எண்ணெய், த‌யிர், புதினா இலை,சேப்ப‌ங்கிழ‌ங்கு ,ஓம‌ப்பொடி சேர்த்து மிருதுவா ச‌ப்பாத்தி மாவு ப‌தத்துக்கு பிசைய‌னும்.ஒரு அரை ம‌ணி நேர‌ம் மாவை ஊற‌ வெக்க‌னும்,இப்ப‌ மாவை உருண்டைக‌ளாக்கி முக்கோண‌ ப‌ரோட்டா செஞ்சி தோசைக்க‌லை சூடாக்கி என்ணெய் அல்ல‌து நெய் விட்டு பொன்னிற‌மாகுற‌ வ‌ரை வேக‌ விட‌னும்..ந‌லா மிருதுவாக‌வும்,வித்த்டியாஅமான‌ டேஸ்டாக‌வும் இருக்கும்,
குறிப்பு: ச‌ப்பாத்தி மிருதுவா இருக்க‌ சூடான‌ த‌ண்ணீர் அல்ல‌து பால் விட்டு மாவு பிசைய‌லாம்.

தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை


தேங்காய் இல்லாம‌ ந‌ம்மூருல‌ ச‌மைய‌லே இருக்காது,அதுவும்,க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம்,கேர‌ளா ப‌குதிக‌ள்ள‌ தேங்காய் இல்லாம‌ ச‌மைய‌ல‌ நின‌ச்சிக்கூட‌ பாக்க‌ முடியாது..இப்ப‌ நாம‌ ஒரு இனிப்பு ப‌ல‌காரம் எப்ப‌டி செய்ய‌லாமுனு பாப்போமா..
தேவையான‌து:
பொடிச்ச‌ ர‌வை 2 க‌ப்
துருவின‌ தேங்காய் 1 க‌ப்
சீனி 150 கிராம்
ஏல‌க்காய் பொடி 1/2 ஸ்பூன்
திராட்சை 10
பாதாம் 10
உப்பு 1 சிட்டிகை
ரீஃபைன்ட் ஆயில் பொரிக்க‌
செய்முறை:
தேங்காய் பூர‌ண‌ம்:
துறுவின‌ தேங்காய‌ வாணலியில‌ கொட்டி ஈர‌ப்ப‌சை சுண்டுற‌ வ‌ரைக்கும் ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,தேங்காய் சிவ‌க்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் அதுல‌ மிக்ஸியில‌ அர‌ச்ச‌ ஏல‌க்காய் சீனிக்க‌ல‌வைய‌ சேர்க்க‌னும்.சீனி தேங்காயோட‌ ந‌ல்ல‌ ஒட்டின‌தும் அதுல‌ பாதாம்,திராட்சைய‌ சேர்த்து ஆற‌ வெக்க‌னும்.
ர‌வா உருண்டை:
இப்ப‌ அடுப்புல‌ ஒரு அடி க‌ன‌மான‌ பாத்திர‌த்துல‌ 5 க‌ப் த‌ண்ணீர் ஊர்றி அதுல‌ ஒரு சிட்டிகை உப்பு,மீதி இருக்க‌ற‌ சீனியையும் சேர்த்து கொதிக்க‌ விட‌னும்.ந‌ல்லா கொதிச்ச‌தும் ர‌வைய‌ கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா சேர்க்க‌னும்,க‌ர‌ண்டியால‌ ந‌ல்லா கிள‌றி விட்டுக்கிட்டே இருக்க‌னும்,அடி பிடிச்சிட‌ கூடாது,கெட்டியாகாம‌ இருக்க‌ அடுப்ப‌ சிம் ல‌ வெச்சிக்க‌னும்,பிற‌கு அடுப்பை அண‌ச்சிட்டு ர‌வை க‌ல‌வைய‌ லேசான‌ சூட்டோட‌ உருண்டையா செஞ்சிக்க‌னும்,அந்த‌ ர‌வா உருண்டைல‌ லேசா குழி செஞ்சி அதுல‌ தேங்காய் பூர‌ண‌த்த‌ ந‌டுவில‌ வெச்சி ந‌ல்லா மூடி வெச்சி உருட்ட‌னும்,
இப்ப‌ வாண‌லியில‌ என்ணெய் ஊற்றி சூடான‌தும் த‌யாரிச்சி வெச்சிருக‌ற‌ ர‌வா உருண்டைக‌ள‌ எண்ணெயில‌ போட்டு பொன்னிற‌மா பொரிச்செடுக்க‌னும்,அவ்வ‌ள‌வு தான்.இந்த‌ தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை ரொம்ப‌ டேஸ்டா இருக்கும்,ட்ரை ப‌ண்ணி பாருங்க‌..