செவ்வாய், 30 மார்ச், 2010

வாழைத்த‌ண்டு ர‌ச‌ம்


அறுசுவை விருந்துக‌ள்ள‌யும் ர‌ச‌த்துக்கு த‌னி இட‌ம் உண்டு. சாப்பாட்டை சீக்கிர‌மா ஜீர‌ணமாக்குற‌ இந்த‌ ர‌ச‌த்துல‌ ப‌ல‌ வ‌கைக‌ள் இல்லையா.. அதுல‌ வாழைத்துண்டு ர‌ச‌மும் ஒன்ணு.இது ஆரோக்கிய‌த்தை த‌ருகிற‌தோட‌ சிறுநீர‌க‌ க‌ல் அடைப்பையும் ச‌ரியாக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்:

ஒரு அடி நீள‌ வாழைத்த‌ண்டு -1
துவ‌ர‌ம் ப‌ருப்பு -100 கிராம்
த‌க்காளி -3
ர‌ச‌ப்பொடி -2 டீஸ்பூன்
எலுமிச்ச‌ம் ப‌ழ‌ம் -1
ம‌ஞ்ச‌ள் பொடி -1/4 டீஸ்பூன்
பெருங்காய‌ப்பொடி -1டீஸ்பூன்
கொத்தம‌ல்லித் த‌ழை -சிறிது
உப்பு -தேவையான‌ அள‌வு

தாளிக்க‌:


ரீஃபைன்ட் ஆயில் -2 டீஸ்பூன்
உளுத்த‌ப‌ருப்பு -1 டீஸ்பூன்
க‌ருவேப்பிலை -சிறிது
க‌டுகு -1 டீஸ்பூன்


செய்முறை:

வாழைத்த‌ண்டை குட்டி குட்டியா ந‌றுக்கி மிக்ஸியில‌ அடிச்சு சாறு எடுத்துக்க‌னும். துவ‌ர‌ம் ப‌ருப்பை வேக‌ வெச்சு ம‌சிச்சுக்க‌னும்.

அடுப்பை மித‌மான் தீயில‌ வெச்சிட்டு வாண‌லியில‌ எண்ணெய் விட்டு க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌ருவெப்பிலை போட்டு தாளிச்சுக்க‌னும், இப்ப‌ ந‌றுக்கி வெச்சிருக்குற‌ த‌க்காளி போட்டு வ‌த‌க்கிக்க‌னும்.

இந்த‌ க‌ல‌வையோட‌ வாழைத்த‌ண்டுச் சாறு, ம‌சிச்ச‌ துவ‌ர‌ம் ப‌ருப்பு ரெண்டையும் சேர்க்க‌னும். லேசா கொதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் பெருங்காய‌தூள், ம‌ஞ்ச‌ள் தூள், ர‌ச‌ப்பொடி,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து ந‌ல்லா கிண்டி விட்டு கொதிக்க‌ வெச்சு இற‌க்க‌னும்.

இப்ப‌ ந‌ல்ல‌ வாச‌னையான‌ வாழைத்த‌ண்டு ர‌ச‌ம் ரெடி. இதோட‌ ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை தூவி ப‌ரிமாற‌ வேண்டிய‌து தான் பாக்கி.

இந்த‌ ர‌ச‌ம் டேஸ்டான‌து ம‌ட்டும‌ல்ல‌! ம‌ருத்துவ‌ குண‌மும் நிறைஞ்ச‌தும் கூட‌..

ச‌ர்க்க‌ரை நோய் குறைக்கும் ரெசிபி


காஃபியில‌ ச‌ர்க்க‌ரை போட‌வா,இல்ல போட‌ வேணாமா‌.என்ன‌ நீங்க‌ சுக‌ர் பேஷ‌ன்டா..இந்த‌ கேள்விக‌ள் அதிக‌மாக‌வே ச‌மூக‌த்துல‌ உலா வ‌ந்துட்டிருக்கு..பிற‌க்குற‌ குழ‌ந்தையில‌ இருந்து வ‌ய‌தான‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் இப்ப‌ ச‌ர்க்க‌ரை நோய் ச‌க‌ஜ‌மாகிப் போச்சு..

இந்த‌ நோய் ப‌ர‌ம்ப‌ரை நோயா இருந்தாலும்,நாம‌ பாக்குற‌ வேலைக‌ள், உணவுக் க‌ட்டுப்பாடுக‌ளும் ஒரு கார‌ணம் தான்..இதை க‌ட்டுப்ப‌டுத்த‌ மாத்திரை ம‌ருந்துக‌ள் ம‌ட்டும் தீர்வு இல்ல‌,,வாழ்நாளை சுவாராசிய‌மாக்க‌ உணாவுக்க‌ட்டுப்பாடு ரொம்ப‌ அவ‌சிய‌மான‌து.

ஏன்ன‌ ர‌த்த‌த்துல‌ ச‌ர்க்க‌ரை அளாவு எப்ப‌வும் ச‌ரியான‌ விகித்த‌துல‌ இருக்க‌னும். ஒண்ணும் சாப்பிடாத‌ நேர‌த்துல‌ ச‌ர்க்க‌ரை அள‌வு 80'ல‌ இருந்து 110 மில்லிகிராம் இருக்க‌லாம்.

சாப்பிட்ட‌ பிற‌கு 2 ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு 82'ல‌ இருந்து 120 மில்லிகிராம் இருக்க‌லாம்.இதை எல்லாம் தாண்டினாத்தான் ச‌ர்க்க‌ரை நோய் வ‌ந்துடுச்சினு புரிஞ்சிக்க‌லாம்,


இது எல்ல‌த்தையும் ச‌ரிசெய்ய‌ ஒரு லேசான‌ ரெசிபி இதோ:



வாழைப்பூ க‌ஞ்சி:


தேவையான‌ பொருட்க‌ள்:

வாழ‌ப்பூவிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌ பூக்க‌ள்- 25
ச‌ம்பா அரிசி -2 ஸ்பூன்
நெய் -1/4 டீஸ்பூன்
ந‌ல்லெண்ணெய் -1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை- 1
இஞ்சித்துருவ‌ல்- 1 டீஸ்பூன்
ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழை,புதினா -2 ச்பூன்
பொடியா ந‌றுக்கின‌ த‌க்ககாளி -1 ஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு


செய்முறை:

வாண‌லியில‌ நெய்,ந‌ல்லெண்ணெய் விட்டு காய்ந்த‌தும் பிரிஞ்சி இலை வ‌றுத்து, அதோட‌ த‌க்காளி,இஞ்சித்துருவ‌ல்,ந‌றுக்கின‌ வாழைப்பூ போட்டு வ‌த‌க்கி அரிசியைப் போட்டு 2 நிமிஷ‌ம் கிள‌ர‌னும் அரிசியில‌ எண்ணெய் க‌ல‌க்குற‌ வ‌ரைக்கும் கிள‌ரி உப்பு போட்டு கூழா வேக‌த் தேவையான‌ அள‌வு த‌ண்ணீர் விட்டு குக்க‌ருல‌ வேக‌ வைக்க‌னும்,


இற‌க்கின‌தும் கொத்த‌ம‌ல்லி,புதினா தூவினா வாழைப்பூ க‌ஞ்சி ரெடி.. இதை சாப்பிட‌ கொஞ்ச‌ம் க‌ச‌ப்பாக‌வும்,துவ‌ர்ப்பாக‌வும் இருக்கும்,ஆனா உட‌ம்போட‌ கொழுப்பை குறைக்கும், வ‌யிற்றுச்ச‌தையை குறைக்கும், அத‌னால‌ எப்ப‌ வேணா சாப்பிட‌லாம்..

ப‌ழ‌ங்க‌ளின் ந‌ன்மைக‌ள்:


காலி வ‌யிற்றில‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட்டா உட‌ம்புல இருக்குற‌ ந‌ச்சுப்பொருட்க‌ள் எல்லாம் அடித்துத் த‌ள்ளி வெளியே கொண்டு வ‌ந்துடும், இத‌னால‌ உட‌ல் எடை குறைகிற‌தோட‌ புத்துண‌ர்ச்சியும், தெம்பும் உட‌லுக்குத் தானா கிடைக்கும்.


2.மூனு ந‌ட்க‌ள் ப‌ழ‌ ட‌ய‌ட்'டுல‌ ம‌ட்டும் இருந்து தான் பாருங்க‌ளேன்..அப்டினா 3 நாட்க‌ளுமே ப‌ழ‌ம்,ப‌ழ‌ர‌ச‌ம்,சால‌ட் ம‌ட்டுமே சாப்பிட‌னும்.இப்ப‌டி ம‌ட்டும் ட்ரை ப‌ண்ணுனீங்க‌னா உங்க‌ உட‌லும்,முக‌மும் ஜொலிஜொலிக்கும். ஆனா ஒண்ணுங்க‌ உங்க‌ளுக்கு நீர‌ழிவு நோய் இருந்தா ப‌ழ‌ ட‌ய‌ட் வேணாம்.


3.ப‌ழ‌ங்க‌ள‌ எப்ப‌வுமே சாப்பாடு முடிச்ச‌வுட‌னே சாப்பிட‌கூடாது,ஆனா காலி வ‌யிற்றுல‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட‌லாம். ஏன்னா ரெண்டு இட்லி சாப்பிட்ட‌ பிற‌கு ஒரு ப‌ழ‌ம் சாப்பிட்டா எல்லாமே வ‌யிற்றுக்கு நேரா போயிடும், ப‌ழ‌ம் ஈஸியா ஜீர‌ண‌மாகிடும்,ஆனா இட்லி செரிக்க‌ நேர‌மாகும், அத‌னால‌ இட்லி அமில‌மா மாறிடும்,அதோட‌ ஜீர‌ண‌மான‌ ப‌ழ‌மும்,ஜீர‌ணாமாக‌ உத‌வுற‌ அமில‌ங்க‌ளும் ஒண்ணா சேர்ந்துட‌ற‌துனால‌ ஒரே க‌லாட்டாவாகி வ‌யிற்றுல‌ உணவு கெட்டுப் போக‌ தொட‌ங்கும், இதுக்குத்தான் சாப்பாடு சாப்பிட்ட‌ பிற‌கு ப‌ழ‌ம் சாப்பிட‌க்கூடாது புரியுதா,,



4.ப‌ழ‌ர‌ச‌மா சாப்பிடுற‌த‌ விட‌ ப‌ழ‌த்துண்டுக‌ளா சாப்பிடுற‌துனால‌ நார்ச்ச‌த்து நிறைய‌ கிடைக்கும். ப‌ழ‌ர‌ச‌மா சாப்பிடற‌ நேர‌த்துல‌ க‌ட‌ க‌ட‌னு ஜூஸை குடிக்காம‌ல் கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா உறிஞ்சி வாயில‌ சுர‌க்குற‌ எச்சிலோட‌ சேர்த்து விழுங்க‌னும்.

5.ஒரே ஒரு கீற்று த‌ர்பூச‌ணி சாப்பிட்டா சில‌ர் பெருசா ஏப்ப‌ம் விடுவாங்க‌. ஒண்ணு ரெண்டு வாழ‌ப்ப‌ழ‌ம் சாப்பிட்டா பாத்ரூம் பார்த்து ஓடுவாங்க‌. ப‌ப்பாளித்துண்டுக‌ள‌ சாப்பிட்டா சில‌ருக்கு வ‌யிறு பை மாதிரி வீங்கிடும், ஏன்'னு தெரியுமா?...நான் சொல்றேன் கேளுங்க‌.. ப‌ழ‌ம் சாப்பிடுற‌துக்கு முன்னாடி சாப்பிட்ட சாப்பாட்டோட‌ ப‌ழ‌ர‌ச‌ம் சேரும்போது கிள‌ம்புற‌ "வாயு" தான் கார‌ணம். சில‌ருக்கு வாயு வ‌யிற்றுல‌ த‌ங்காம‌ ஏப்ப‌மா வெளியே வ‌ரும், இதே ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட்டுப் பாருங்க‌ எந்த‌ தொந்த‌ர‌வும் வ‌ராது.. ஒகே..

6.வெறும் வ‌யிற்றுல‌ ப‌ழ‌ங்க‌ள‌ சாப்பிட்டா நாற்ப‌து வ‌ய‌தை நெருங்கும்போதே வ‌ருகிற‌ ந‌ரைமுடி,வ‌ழுக்கை,ந‌ர‌ம்புத்த‌ள‌ர்ச்சி,க‌ருவ‌ளைய‌ம் இதெல்லாம் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் ஓடிடும்.


7.க‌டைசியா ஒண்ணு சொல்றேன் ந‌ல்லா கேட்டுக்கோங்க‌..ப‌ழ‌ங்க‌ள‌ ச‌ரியான‌ முறையில‌ சாப்பிட்டா (அட‌ சாப்பிட்டுத்தான் பாருங்க‌ளேன்)உங்க‌ அழ‌கு,ச‌க்தி,ச‌ந்தோச‌ம்,ஆயுசு கூடும்.. ஆனா..ஆனா...ஆனா...எடை ம‌ட்டும் குறைஞ்சிடும்,, ஐஸ்வ‌ர்யாராய்'க்கு போட்டியா மாறிடுவீங்க‌ போங்க‌..