புதன், 6 ஜனவரி, 2010

கோதுமை மாவு பரோட்டா கீமா


பரோட்டாவை கடைகளில் மைதாமாவில் செய்து உள்ளே கீமா வைத்து சுருட்டி கொடுப்பார்கள், நான் இதை கோதுமைமாவில் செய்துள்ளேன். மிக முக்கியமான டிபன் அயிட்டம் சத்தான டிபன்.
தேவையான பொருட்கள்:
பரோட்டா த‌யாரிக்க‌:
கோதுமை மாவு - மூன்று கப் உப்பு ‍ ஒரு தேக்கரண்டி சோடாமாவு ‍ ஒரு சிட்டிக்கை பட்டர்(அ) நெய் - இரண்டு மேசைக்கரண்டி பால் - கால் கப் ச‌ர்க்க‌ரை -முன்று தேக்க‌ர‌ண்டி
கீமா த‌யாரிக்க‌:
கீமா - கால் கிலோ
எண்ணை ‍ இரண்டு தேக்க‌ர‌ண்டி
ப‌ட்ட‌ர்- 1 தேக்க‌ர‌ண்டி
வெங்காய‌ம் ‍ 5
ஃப்ரோஜ‌ன் பட்டாணி = இரண்டு தேக்க‌ர‌ண்டி
இஞ்சிபூண்டு பேஸ்ட் - இரண்டரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிளகாய் - 2
மிள‌காய்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள்தூள்- கால் தேக்க‌ர‌ண்டி
க‌ர‌ம்ம‌சாலாதூள் - அரை தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌த்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு- தேவைக்கு
ம‌ல்லித்த‌ழை சிறிது
செய்முறை :
கோதுமையில் சோடா,உப்பு, பட்டர் பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும். இப்போது நல்ல ஊறவைத்த பரோட்டாமவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பறத்தி அதில் ஒரு தேக்கரண்டி முழுவதும் தடவி புடவை கொசுவ‌ம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
மைதா ப‌ரோட்டா :
கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்கவிடவும். எண்ணையை காய வைதது வெஙகாயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் முறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்து மல்லி,பச்சமிளகாய்,தக்காளியை போட்டு வதக்க்கவும் வதக்கி எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும். கீமா மட்டர் ரெடி.
இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளயும் வட்ட வடிவ பரொட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரண்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது.எட்டு பரோட்டா வரும்.
குறிப்பு :
இதில் ப‌ட்ட‌ர்,நான் ,(ஃபுரோஜன் பட்டாணி சிறிது) நீங்கள் கூட எந்த காய்கறி வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.இதை சிக்கன் கீமாவிலும் செய்யலாம்கோதுமை பரோட்டா செய்து இதை உள்ளே வைத்து சுருட்டினல் சாப்பிடும் போது நல்ல பஞ்சி மாதிரி இருக்கும்.
இதே கோதுமைமாவு பரோட்டாவை குழந்தைகளுக்கு 1 வயதில் இருந்து வாரம் ஒரு முறை செய்து பால் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து கொடுத்தால் நல்ல தளதளன்னு மின்னுவார்கள். இன்னும் நல்ல ஷாப்டாக வர சிறிது உடைத்த கடலையை பொடித்து சேர்த்து கொள்ளலாம்...

உருளைக்கிழ‌ங்கு தொக்கு


நிஜ‌ம்மாக‌வே ரொம்ப‌ ருசியா இருக்கும்,,கார‌ சார‌மான‌ சாப்பாடுனா உருளைக்கிழ‌ங்கு தொக்கு தான் பெஸ்ட்.அதுவும் சாம்பாரோட‌ சேர்த்து சாப்பிட்டா சூப்ப‌ரா இருக்கும்,அதுவும் ந‌ல்லா ப‌சியோட‌ இருக்கும்போது அட‌டா தேவாமிர்த‌மா இருக்கும் போங்க‌,ச‌மைக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா.

தேவையான‌வை:
உருளைக்கிழ‌ங்கு 1/4 கிலோ
க‌டுகு 1/2 ஸ்பூன் க‌ருவேப்பிலை ‍கொஞ்ச‌ம்
வ‌த்த‌ல் பொடி 25 கிராம்
ம‌ல்லிப்பொடி 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் பொடி 1/4 ஸ்பூன்
ப‌ல்லாரி‍ 1
த‌க்காளி 1
உப்பு தேவையான‌ அள‌வு
இஞ்சி+பூண்டு விழுது 1 ஸ்பூன்
ம‌ல்லித்த‌ழை சிறிது
ரீஃபைன்ட் ஆயில் 3 ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழ‌ங்க‌ ந‌ல்லா அவிச்சி தோல் உறிச்சி குட்டி குட்டியா ந‌றுக்கி வெச்சுக்க‌னும்,வாண‌லியில‌ எண்ணெய் விட்டு ந‌ல்லா காய்ஞ்ச‌தும் க‌டுகு+உளுத்த‌ம்ப‌ருப்பு+க‌ருவேப்பிலை எல்லாம் போட்டு தாளிச்ச‌தும் பொடிசா ந‌றுக்கின‌ ப‌ல்லாரி போட்டு ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,அப்புற‌மா வெட்டி வெச்சிருக்க‌ற‌ த‌க்காளி போட்டு வ‌த‌ங்கின‌தும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,இப்ப‌ வ‌த்த‌ல் பொடி,ம‌ஞ்ச‌ள் பொடி,ம‌ல்லிப்பொடி உப்பு சேர்த்து கிள‌ற‌னும்,இப்ப‌ கொஞ்ச‌மா த‌ன்ணி சேர்த்து,அதோட‌ கொஞ்ச‌மா க‌ர‌ம் ம‌சாலா சேர்த்து ந‌ல்லா வாச‌ம் வ‌ந்த‌தும் ந‌றுக்கின‌ உருளைக்கிழ‌ங்கு சேர்த்து வ‌த‌க்க‌னும்,ப‌ச்சை வாச‌னை போன‌தும் கொஞ்ச‌மா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழைய‌ தூவி இற‌க்க‌னும்,ந‌ல்ல‌ ம‌ண‌ம்,,ந‌ல்ல‌ இருக்குல்ல‌..ச‌ரி,ச‌ரி ச‌மைச்சி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க‌...