
பொண்ணு பார்த்துட்டு வர்றவுக,அல்லது கல்யாண தரகர் கிட்ட பொண்ணு எப்படி இருக்குனு கேட்டா போதும் ,,,உடனே பொண்ணு தக்காளி மாதிரி தள தளனு இருக்குறானு சொல்லுவாங்க..இப்படி பட்ட தக்காளிய ஆரம்பத்துல வேண்டாத பொருளா,விஷ பழமா தான் பார்த்தாங்களாம்..அதுக்கப்ப்றமா பஞ்சம் வந்த சமயத்துலதான் வேற வழி இல்லாம தக்காளிப்பழத்தை பயன்படுத்த ஆரம்பிச்சாங்களாம் நம்ம மக்கள்... இப்டி எல்லாம் நிறைய கதைகள் தக்காளிக்கு உண்டு,,இப்படி பட்ட தக்காளியோட வெங்காயம் சேர்த்து என்ன சமையல் செஞ்சாலும் சூப்பர் தான்,,ஏன்னா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா தான் நிறைய கிரேவி கிடைக்கும்..இப்படியான தக்காளி,வெங்காயம் சேர்த்த நான் உங்க எல்லாருக்கும் ஒரு ஊருக்காய் செஞ்சி தரலாமுனு நினைக்கிறேன்..
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் 2
பூண்டு 10 பல்
நல்லெண்ணைய் 1/4 லிட்டர்
வத்தல் தூள் - 50 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காய பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை லேசா எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில நல்லா அரைச்சி வடிகட்டிக்கனும்,ஏன்னா சக்கை இருந்தா நல்லா இருக்காதுல்ல.வெங்காயத்தையும்,பூண்டையும் வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கி அதையும் அரைச்சிக்கனும்.அடுப்பில நல்லெண்ணெய ஊற்றி கடுகு,வெந்தயம் தாளிச்சி அதோட தக்காளி+வெங்காயம் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கனும்,இப்ப அதோட சிவந்த நிற வத்தல் தூள்,மஞ்சள் தூள்,பெருங்காயப்பொடியை ஒண்ணு பின்னால ஒண்ணா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து லேசா வதக்கி 10 நிமிஷம் அடுப்பை "சிம்"மில வெக்கனும்.மீதம் இருக்கற எண்ணெயை ஊற்றி லேசா சுருள வேகவெச்சி 10 நிமிஷம் ஆற வெச்சா தக்காளி வெங்காயம் ஊறுகாய் ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக