வெள்ளி, 26 மார்ச், 2010

பாதாம் அல்வா

திருநெல்வேலி"னு சொன்ன‌வுட‌னே எல்லாஅருடைய‌ ம‌ன‌சுக்குள்ள‌யும் எட்டி பாக்குற‌து,நாக்குல‌ த‌ண்ணீர் வ‌ர‌ வைக்கிற‌ அல்வா தான்..ஆஹா..எப்ப‌டி இருக்கும் தெரியுமா..அட‌டா..டேஸ்டோ,டேஸ்ட் போங்க‌..நெல்லை ட‌வுண் இருட்டுக்க‌டை அல்வாவுக்கு இணை எதுவுமே இல்ல‌..அப்ப‌டியே இலையில‌ சுட‌ சுட‌ வாங்கி நாக்குல‌ ப‌ட்டும் ப‌டாம‌லும் "ம்லுக்"னு வ‌யித்ட்துக்குள்ள‌ போகும் பாருங்க‌..அட‌டா..
இப்டி இருந்தாலும் வித்யாச‌மான‌ அல்வா செய்ய‌லாம்னு தோணிடுச்சி,,செஞ்சும் பார்த்துட்டேன்..அது என்ன‌ன்னா ந‌ம்ம‌ "பாதாம் அல்வா"தான்..பாதாம் விக்குற‌ விலையில‌ இது தேவையானு நீங்க‌ கேக்குற‌து என‌க்கு கேக்குது..இருந்தும் செஞ்சு குடுத்தா வேணாம்னா சொல்லுவோம்..




தேவையான‌ பொருட்க‌ள்:

பாதாம் ப‌ருப்பு 1 க‌ப்
இனிப்பில்லாத‌ கோவா 1 க‌ப்
பொடித்த்ட‌ ச‌ர்க்க‌ரை (சுக‌ர்) 1 1/2 க‌ப்
நெய் 1/4 க‌ப்
குங்கும‌ப்பூ 1/4 ஸ்பூன்
பால் 1/2 க‌ப்
ஏல‌க்காய் தூள் 1/4 ஸ்பூன்

செய்முறை:

முத‌ல்ல‌ பாதாம் ப‌ருப்புக‌ளை 15 நிமிஷ‌ம் சூடானா வெந்நீருல‌ போட்டு ஊற‌ வெச்சு தோல் உறிச்சு எடுத்து அதோட‌ பால் சேர்த்து அரைச்சு கோவா கூட‌ சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்,இப்ப‌ அடுப்ப‌ ப‌த்த வெச்சு பாதாம்+கோவா க‌ல‌வையை சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும். அதோட‌ மீத‌மிருக்க‌ற‌ பால் சேர்த்து கிள‌ரி விட‌னும்.பால் சுண்ட‌ ஆர‌ம்பிச்ச‌தும் 1 1/2 க‌ப் பொடித்த‌ சீனி சேர்க்க‌னும்,அது நல்லா கரைந்தவுடனே கேச‌ரி பவுடர் சேர்த்து, 1/4 டம்ளர் நெய்யை ஊற்ற‌னும். இப்ப‌ பாலுல‌ க‌ரைச்ச‌ குங்கும‌ப்பூ,ஏல‌க்காய் ப‌வுட‌ர் க‌ல‌ந்த‌தும் நல்லா கெட்டியாகி அல்வாப் பதத்தில வரும்போது, இறக்கி வெச்சு மீதி நெய்யை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா விட்டு நல்லா கிளறி ஆறவிடனும்.இப்ப‌ பாதாம் அல்வா ரெடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக