புதன், 31 மார்ச், 2010

உளுந்த‌ங்க‌ளி

ரொம்ப‌ கால‌த்துக்கு முன்னாடி வ‌ரைக்கும் இருந்த‌ ப‌ழ‌மையான‌ உணாவு இது.கிராம‌த்துல‌ பொன்னுங்க‌ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ உட‌னே உளுந்த‌ங்க‌ளியை தான் கிண்டி சலிக்க‌ ச‌லிக்க‌ சாப்பிட‌ சொல்லுவாங்க‌. சாப்பிட்டு முடியாது.. ஆனா செம‌ டேஸ்ட் .
ஏன்னா இது இடுப்பு எலும்புக‌ளுக்கு ப‌ல‌ம் கொடுக்கும்,




தேவையான‌ பொருட்க‌ள்:


க‌ளி மாவு -2 க‌ப்
(அதாவ‌து
ஒரு க‌ப் முழு உளுந்து கூட‌ ஒரு க‌ப் ப‌ச்ச‌ரிசி‍'ங்குற‌ விகித‌த்துல‌ சேர்த்து மாவு திரிக்க‌னும்)
க‌ருப்ப‌ட்டி -2 க‌ப்

ந‌ல்லெண்ணெய்- தேவையான‌ அள‌வு

செய்முறை:


க‌ருப்ப‌ட்டித் தூளை ஐந்து ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ க‌ரைச்சு வ‌டிக‌ட்டிக்க‌னும்.

வ‌டிகட்டின‌ க‌ருப்ப‌ட்டி த‌ண்ணீரோட‌ கொஞ்ச‌ கொஞ்ச‌மா தூவி க‌ட்டி இல்லாம‌ க‌ரைச்சு ஒரு பாத்திர‌த்துல‌ ஊத்த‌னும்.


அந்த‌ பாத்திர‌த்தை அடுப்பிலே வெச்சு கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா ந‌ல்லெண்ணெய் ஊற்றி கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும்,லேசான‌ தீயை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌னும்.

மாவு உருண்டு ச‌ட்டியில‌ ஒட்டாத‌ ப‌தத்தில் வ‌ரும்போது இற‌க்கி , ஆறின‌ பிற‌கு கையில் ந‌ல்லெண்ணெய் தொட்டு உருட்ட‌னும், இப்ப‌ உளுந்த‌ங்க‌ளி ரெடி.. ந‌ல்லா சாப்பிடுங்க‌..ந‌ம்மூரு ருசி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக