
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் - 30 கிராம் (பொடியா நறுக்கினது)
காரட் - 50 கிராம் (ரொம்ப பொடியா நறுக்கினது)
பச்சை பட்டாணி -20 கிராம்
தக்காளி - 30 கிராம் (பொடியா நறுக்கினது)
நல்லெண்னெய் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 (நறுக்கினது)
சீரகம் - 2 கிராம்
முட்டைகோஸ் 20 கிராம் (பொடியா நறுக்கினது)
குடைமிளகாய் 20 கிராம் (பொடியா நறுக்கினது)
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
செய்முறை:
வாணலியில் எண்ணெயை காய வெச்சு சீரகத்தை போட்டு தாளிச்சதுக்கப்புறமா நறுக்கின மிளகாய்,கேரட்,பட்டாணி,வெங்காயத்தை போட்டு லேசா வதங்க வைத்து 2 கப் தண்ணீர் ஊத்தி அதுல 2 கப் தண்ண்ணீர் விட்டு கொதிக்க வைக்கனும்.கொதி வந்த உடனே உப்பு சேர்த்து நறுக்கின குடை மிளகாய்,முட்டைகோஸ் போட்டு ஓட்ஸையும் போட்டு நல்லா கிளரனும்.
நல்லா குழைஞ்சி வர்ர பதத்துல தக்காளிய போட்டு அது கூடவே கொத்தமல்லி தழைய போட்டு பிரட்டி இறக்கி பரிமாறனும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக