குழந்தைப் பேறுங்குறது மழை பெய்யற மாதிரி,வெயில் அடிக்கிற மாதிரியான இயற்கை நிகழ்வு,,அதை மனசுல கொண்டு தான் இயற்கை ஆணையும்,பெண்ணையும் அதுக்கேத்த மாதிரி டிசைன் பண்ணியிருக்கு,
ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி மகப்பேறு உருவாகாத நிலைக்கு அடிப்படை காரணம் கிருமிகள் தான்,இந்த உடல் சூட்டையும்,கிருமிகளையும் சரி செய்ய இதோ ஸ்பெஷல் சூப்புகள்..
1.பசலை சூப் பசலை கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நல்லா அலசி நறுக்கிக்கனும்,அதுல ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை வறுத்துப் போட்டு அதை ரெண்டு டம்ளர் தண்ணீருல கொதிக்க வெச்சு வடி கட்டி எடுத்தா பசலை சூப் ரெடி..
2.
வேப்பிலை சூப்:
வேப்பிலை கொழுந்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அலசி கொதிக்க வெச்சு ஒரு டம்ளர்ல எடுத்தா வேப்பிலை சூப் ரெடி,இதை குடிக்கிறதால உடல் சூடு குறையறதோட கிருமியும் சாகும்.
3.
செம்பருத்தி சூப்:

சிவப்பு நிறமா இருக்கற ஒத்தை இலை செம்பருத்திப்பூ ஐந்து எடுத்து நல்லா சுத்தம் செஞ்சு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அவித்து,ஒரு கரண்டியால அதை ஒரு கசக்கு கசக்கிய பிறகு அந்த தண்ணீர வடிகட்டி ஆற வெச்சு கொஞ்சம் பால் சேர்த்தா செம்பருத்தி சூப் ரெடி,இந்த சூப் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.
4.
முருங்கை சூப்:
முருங்கை இலைஒரு கைப்பிடி எடுத்து அலசி அதை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வெச்சி வடி கட்டினா முருங்கை சூப் ரெடி,இது உடம்போட வாய்வையும் குறைக்கு,.நெஞ்சு வலி வரவே வராது.
5.
கல்யாண முருங்கை சூப்:
கல்யாண முருங்கை இலையை ஒரு கைப்பிடிஎடுத்து அதோட கொஞ்சம் பெருஞ்சீரகம் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வெச்சு வடி கட்டி எடுத்தா கல்யாண முருங்கை சூப் ரெடி,இதனால மலட்டுத்தன்மை வராது.
5.
கொத்துமல்லி சூப்:
கொத்துமல்லி தழைகளை ஒரு கைப்பிடி ஆய்ந்து நல்லா அலசி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வெச்சு ஆறவெக்கனும்,அப்புறமா அரை டம்பர் பால் சேர்த்தா கொத்தமல்லி சூப் ரெடி .இது ப்ரெஷ்ஷரை குறைக்கும்,சட்டு,சட்டுனு வருகிற நபர்கள் இதை தினமும் குடிக்கனும்,அப்புறம் பாருங்க மாற்றத்தை..
6.
கருவேப்பிலை சூப்:
கருவேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து அலசி கொதிக்கவெச்சு ஆற வெச்சு வடி கட்டி அரை டம்ளர் பால் சேர்த்து எடுத்தா கருவேப்பிலை சூப் ரெடி,பால் சேர்க்காமலும் குடிக்கலாம்,இந்த சூப் பித்தத்தை குறைக்கும்,வயிற்றுப் புண்ணை ஆற்றும்,மூளைக் கோளாறு உள்ளவங்க சாப்பிட்டா சீக்கிரமா சரியாகும் .
7.
வாழைப்பழ சூப்: 
மொந்தன் வாழைப்பழத்தை தோலோடு துண்டு துண்டா நருக்கி,பிசஞ்சிட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கனும்,அதை அப்படியே வடி கட்டி குடிக்கலாம்,இதுல விட்டமின் எ,பி,சி,டி இருக்கு,ஆண்கள் குறிப்பா ஹார்ட் அட்டாக் பிரச்சினை உள்ளவங்களுக்கு நல்லது,ஆனா டிபி,ஆஸ்துமா உள்ளவங்க இதை குடிக்கக்கூடாது.
8.பொன்னாங்கன்னி சூப்:
சர்க்கரை நோய் உள்ளவங்க வாழைப்பழ சூப் சாப்பிட முடியாதுங்குறதுனால பொன்னாங்கன்னி,தொட்டாச்சினுங்கி ரெண்டையும் சம பங்கு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு அதுல ஒரு துளி வறுத்த வெந்தயப்பொடி,துளி பாக்குப்பொடி,ஒரு துளி மஞ்சள் தூள் சேர்த்து வடி கட்டி குடிச்சா இப்ப பொன்னங்கன்னி சூப் ரெடி.களி பாக்கு கிருமியை நீக்கிடும்.